Category: Non-English Stories

மாமா. மாமா (T20 - குறுங்கதைகள்)

by mounirasigan©

மாமா. மாமா (T20 - குறுங்கதைகள்)

என் முன்னால் உட்கார்ந்திருக்கும் என் தூரத்து மாமா ராமனை திருப்பதி வெங்கடாலச்சபதி போல பயபக்தியாக பார்த்துக் கொண்டு இருந்தேன். என் பெயர் ஆனந்த். என் மாமா மிலிட்டரியில் இருந்தவர். ஆனால் மாமாவை பயபக்தியாக பார்த்ததற்கு காரணம் அதுவல்ல. அவருக்கு இருக்கும் இரண்டு அழகான பெண்கள்தான். பெரியவள் அம்பிகா, 20 வயது அழகி. அவளை திருமணம் செய்ய எனக்கு ரொம்ப ஆசை. இளையவள் 19 வயது ராகினி. அவளும் நல்ல அழகிதான். அந்த ரெண்டில் ஒன்று திருமணம் செய்துக்கொள்வது சென்னையில் ஒரு கம்பெனியில் சிறு வேலை செய்யும் பட்டதாரியான எனக்கு என் நெடுநாள் ஆசை. எனக்கு ஒன்று கல்யாணம் செய்துக் கொண்டால் மற்றொன்று இலவசம் என்றாலும் சம்மதம்தான். ஹி ஹி ரொம்ப வழியறனே. அப்படி நினைத்தால் பரவாயில்லை.

என்னை பார்க்கும் நிறைய பேர் அப்படித்தான் நினைக்கிறார்கள். அதனால் தான் இந்த சனிக்கிழமை காலையில் மாமாவை சென்னையில் இந்த ஹோட்டல் ரத்னா பவனில் பார்த்தவுடன் பயபக்தியாக அவர் முன்னால் உட்கார்ந்து விட்டேன். மாமா மாதத்திற்கு ஒரு தடவை சொந்த ஊர் தஞ்சையிலிருந்து சென்னைக்கு வருவார். எப்படியோ எனக்கு வழக்கமாக டிமிக்கி கொடுக்கும் அவரை இன்று பிடித்து விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மஸாஜ் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் மாமா என்னுடன் பேசிக் கொண்டே அவ்வப்போது பார்வையை வெளியே செலுத்திக் கொண்டு இருந்தது புதிராக இருந்தது. ஏன் அப்படி என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை இப்போதெல்லாம் அவருக்கு என்னை பிடிக்கவில்லையா? இது டேஞ்சராச்சே. எனவே தொடர்ந்து பேச்சுக்கொடுத்துக் கொண்டு இருந்தேன்.

"ரொம்ப புதுசு" என்று சொன்ன ராமனை கேள்விக்குறியோடு பார்த்தேன். பின் அவர் பார்வை சென்ற பக்கத்தை பார்த்ததும் திடுக்கிட்டேன். காரணம் அங்கே ஒரு இளம் பெண் நின்று கொண்டு இருந்தாள். கல்லூரிப்பெண் போல. நல்ல ஆறு அடி உயரம் இருப்பாள். இப்போதுதான் தலைக்கு குளித்திருப்பாள் போல. அந்த ஸன்ஸில்க் பட்டு கேசம் பார்க்க ரம்யமாக இருந்தது. ஆனாலும் இந்த 60 வயது கிழத்துக்கு தேவையா இதெல்லாம்? என்று நினைத்துக் கொண்டேன். என் பார்வை அங்கே பார்த்ததை மாமாவும் பார்த்தார். அவர் முகத்தில் புன்முறுவல்.

"நல்ல கலர்?" என்ற அவரை பார்த்த எனக்கு பக்கென்றது. அடப்பாவி? ஒரு வேளை என்னை சோதிக்கறாரா? ஒரு 23 வயது இளைஞனுடன் ஒரு 60 வயது மாமா பேசும் பேச்சா இது? ஆனாலும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. மீண்டும் என் பார்வை அங்கே போனது. ஆஹா. சும்மா சொல்லக்கூடாது. உண்மையிலேயே நல்ல கலர்தான். அந்த பெண் நின்றுக் கொண்டு இருந்த தூரம் குறைவுதான் என்பதால் அவள் அழகை நன்றாக உணரமுடிந்தது. நல்ல சிவந்த நிறம். சுண்டினால் ரத்தம் வரும் போல. அவள் கழுத்தில் நீல பாம்புகள் ஓடிக் கொண்டு இருந்தது. நல்ல கலர்தான். ஆனாலும் மாமா ஏன் என் முன்னால் இப்படி ஓப்பனா சைட் அடிக்கறார். அதுவும் 20 வயதுக்குள்ளே இருக்கும் பெண்ணை இப்படி என் முன்னாலேயே? ம்ம்ம்ம்ம் பெண் என்றால் எல்லாரும் மயங்குவார்கள் போல. என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது

"ஆனந்த், முன்னாடி பார்த்தயா?" என்று மாமா சொன்னவுடன் பக் என்றது. வயிற்றை யாரோ கவ்விக் கொண்ட மாதிரி இருந்தது. காஃபி குடித்துக் கொண்டு இருந்த எனக்கு புரை ஏறிக் கொண்டது. மை காட். அதனால்தான் இந்த ஆள் நான் ஹோட்டலில் உட்கார உள்ளே போகுலாம் என்று சொல்லும் போது கூட இங்கேயே உட்காரலாம். என்று சொன்னாரா? ஆனாலும் இந்த பெண் என்னையும் இப்போது கவர ஆரம்பித்து விட்டாள். ஆம். ரோஸ் கலரில் புடவை கட்டிக் கொண்டு இருந்தாள். அதற்கேற்ப மேட்சாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட். நல்ல பெரிய கண்கள். அதில் வேறு கண் மை போட்டுக் கொண்டு இருந்ததால் கண் இன்னும் பெரியதாகவே இருந்தது. கண் மற்றுமா பெருசு.

எல்லாம் பெருசாகத்தான் இருந்தது. நல்ல ஆப்பிள் கன்னம். தலைக்குழல் கொத்தாக அவள் முகத்தில் விழுந்து அதை அவள் அவ்வப்போது பின்னால் தூக்கி விடுவது பார்க்க அம்சமாக இருந்தது. அவள் மார்பகத்தை திமிறிக் கொண்டு இருந்தது இளமை. ஜாக்கெட்டை தைத்தவன் நன்றாக தைத்து இருந்தான். அந்த"U" சற்று இறங்கியிருந்ததால் அவள் மார்பு பிளவு நன்றாக தெரிந்தது. கொழு, கொழு மார்பகங்கள். ஆனாலும் இப்படி 60 வயது கிழம் எதற்காகவோ வெயிட் செய்யும் பெண்ணை இப்படி ஓப்பனாக சைட் அடிப்பது ரொம்ப ஓவர்தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது அவரிடம் வந்த அடுதத கேள்வி மேலும் சங்கடப்படுத்தியது.

"சைடை பார்த்தாயா?"

அடப்பாவி. சைடு எங்கேடா தெரியுது என்று பார்த்தேன். அப்போது கையில் ஏதோ போனை எடுத்து திரும்பினாள். இதைத்தான் மாமா சைடு வ்யூ என்றாரா? மாமா உனக்கு நல்ல ரசனைதான். சைடாகவும் நன்றாகத்தான் இருந்தாள் அவள். சைடாக அவள் மார்பக கனி நன்றாக தெரிந்தது. அவள் அக்குளில் வியற்வையால் பக்கவாட்டில் லேசாக ஈரம். ஆனால் ஸ்லீவ்லெஸ் என்பதால் அக்குள் பகுதி நன்றாக பளிங்கு போல வழ வழவென்று இருந்தது. மாமாவை பார்த்தேன். மாமா. நீ பலே ஆள்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

"பின்னாடி பார்த்தயா?"

என் வயிற்றில் இப்போ பட்டாம்பூச்சி. அடப்பாவி. இவன் கண்ணில் இருந்து எதுவும் தப்பாதா? அவர் இப்போது அவன் ஆகிவிட்டார். இந்த கிழத்துக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கும். சைட் அடிப்பது தப்பில்லை. ஆனால் இந்த கிழத்துக்கு தேவையா இது? இப்படி நினைத்ததால் என் பற்கள் நற நற. ஆனால் என் எதிர்கால மனைவி(கள்?.) நினைத்து என்னை கண்ட்ரோல் செய்துக் கொண்டேன். உண்மையிலேயே பெரிய பிட்டம்தான். இதற்கென்று தனியாக சாப்பாடு போட்டு வளர்த்திருப்பாளோ? ஆனால் என் அவஸ்தை எல்லாம் தெரியாமல் கூலாக

"நல்ல பிக்கப் ஆனந்த்"

அடப்பாவி மாமா? அடப்பாவி. உனக்கு அந்த பெண்ணை தெரியுமா? பிக்கப்பா? உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா? என்று நினைத்துக் கொண்டேன்.

"என் நண்பன் தான் ஓட்டிட்டு இருந்தான்?"

ஓட்டிட்டு. அப்போ அந்த பெண் ஹிஹி. இப்போது என் பார்வை கொஞ்சம் ஓப்பனாகவே போனது. 60 வயது கிழமே இப்படி கண்ணை பிளந்துக் கொண்டு பார்க்கும்போது 23 வயது இளைஞன் எனக்கு எப்படி இருக்கும்? என் பார்வை மீண்டும் அங்கே போய் அந்த பெண்ணை எக்ஸ்-ரே எடுத்தது. கில்லாடி மாமா? இப்போதுதான் அவள் முகத்தில் இருக்கும் அந்த போதையை பார்த்தேன். கண்கள் நல்ல கவர்ச்சி. சில்க் மாதிரி கவர்ச்சி. ஏதோ போதை வஸ்தை மென்று கொண்டு இருக்கும்போது கண்கள் ஒருமாதிரி கிறங்குமே? அது போல கிறங்கி இருந்தது. என் எதிரில் அமர்ந்து இருக்கும் மாமாவை மீண்டும் பார்த்தேன். அடப்பாவி. உன்னை என்னமேன்னு நினைச்சேன் என்று மனது அவரை நினைத்தாலும், சரி விடு. ஆள்"ஒரு மாதிரிதான்" என்று நினைத்துக் கொண்டேன். அப்போது

"நான்தான் ஒரு வாரத்திற்கு கடன் வாங்கி இருக்கேன்?" என்ற போது தூக்கி வாரிப் போட்டது. அடப்பாவி. இந்த பெண் என்ன பொருளா என்ன கடன் வாங்க. என் தடி திடிரென்று விறைத்துக் கொண்டது. மெதுவாக மாமாவிறகு தெரியாமல் லேசாக தடவிக் கொண்டேன்.

"மாமா இதையெல்லாம் கூடவா கடன்" என்று இழுத்தேன்.

"ஏண்டா. கடன் வாங்க கூடாதா என்ன? நானே எப்பவோ ஒருதடவை சென்னைக்கு வறேன்? ஊரில் இப்படி எல்லாம் பார்க்கவா முடியாம்?"

என் கண்ணில் இப்போ கண்ணீர் வராத குறை. உண்மைதான். தஞ்சாவூரில் எல்லாம் எங்கே இப்படிப்பட்ட ஃபிகர் இருக்க போவுது. அப்படியே இருந்தாலும் பாவாடை - தாவணி போட்டுக் கொண்டு நாம் பார்க்கும் போதே அட்ஜெஸ்ட் செய்யும். என்ன இருக்குது உள்ளே? ஏன் இப்படி அட்ஜெஸ்ட் செய்யறே என்று சொல்ல தூண்டும். மை காட். ஏன் சென்னையிலேயே பையன்கள் எப்படி காலை 9. 30 எல்லாம் மகரஜோதி காண ஜோதி தியேட்டருக்கு ஓடுகிறார்கள்.

"உண்மை தான் மாமா? ஊரில் எங்கே?" என்று வழிந்தேன்.

"அப்படி சொல்லு. இப்பதான் நம்ம வழிக்கு வறே" என்றார் சிரித்துக் கொண்டே.

"நீங்க கில்லாடி தான் மாமா?இந்த வயசில" என்றேன்.

"சும்மாவா மிலிட்டரி உடம்பில்ல. அது சரி. இதுக்கும் வயசுக்கும் என்ன சம்பந்தம்" என்றார். உண்மைதான். வயசுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். இந்த கிழவன் பார்வையே எல்லாத்தையும் சொல்லுதே. பார் எவ்வளவு ஆசையா பார்க்கிறான் இந்த வயசிலும்.

"ஆனந்த் நீ ஓட்டுவியா?" என்று அவர் கேட்டபோது நான் அதிர்ந்து போனேன்.

மாமா உண்மையிலேயே ஒரு மாமாவா? அடப்பாவி. அப்போ இவன் பெண்ணு எப்படி இருக்கும்? தாயை போல பெண் - நூலை போல சேலை என்பார்க்கள். அந்த பெண்கள் இவனை போல இருந்தால் அவ்வளவுதான். பார் கிழம் எப்படி என்னையே ஓட்டுவியா? என்று கேட்குது. சரி ஓட்டுவேன் என்று சொன்னால் உண்மையிலேயே கிழம் எனக்கு ஹெல்ப் செய்யுமா? அப்போ இந்த மாமா பெண்கள். அது கிடக்கு கழுதைகள் என்று நினைத்துக் கொண்டேன். என் கண்கள் அந்த பெண்ணை பார்த்தது? ஆஹா. இந்த பெண் கிடைத்தால் இந்த கிழமாவது? இவன் பெண்களாவது? என்று என் மனதில் டெலிபிரிண்டர் போல தடதடத்தது.

"ஓட்டறேன் மாமா ஹி ஹி" என்று அசடு வழிந்தேன்.

"ஓ. உனக்கு ஓட்ட தெரியுமா? லைசன்ஸ் வைச்சிருக்கியா?" என்றார் மாமா. மை காட். இதுக்கெல்லமா லைசன்ஸ் தருவாங்க. நாமும் சென்னையில் இருக்கிறோம். இதுக்கூட தெரியாம இருக்கமே? ஒருவேளை ரூபாயை லைசன்ஸ் என்று கிழம் சொல்லுதா? என்று என் பாக்கெட்டை தடவிக் கொண்டேன்.

"என்னடா திகைச்சு பார்க்கறே. லைசன்ஸ் வைச்சிருக்கியா?"

"மாமா லைசன்ஸ் இதுக்குக் கூடவா?" என்று இழுத்தேன்.

"பின்ன கார் ஓட்ட லைசன்ஸ் வேண்டாமா?" என்ற போது அதிர்ந்தேன்.

"காரா" என்று பார்த்த போது அந்தப் பெண்ணிற்கு பின்னால் அந்த புதிய கார் நின்று கொண்டு இருந்தது தெரிந்தது. வடிவேல் போல ஏண்டா எதை பற்றி பேசறோம்னு விளக்கமா சொல்ல மாட்டீங்களாடா என்று கேட்டு அந்த கிழவனை சாத்த வேண்டும் போலிருந்தது. கிழவன் இதுவறைக்கும் பேசியது இந்த காரைப் பற்றி தானா?

முற்றும் மௌனி

Written by: mounirasigan

Please Rate This Submission:

Story Tags: indian, desi

Category: Non-English Stories